Wednesday, July 1, 2015

வலுக்கும் போராட்டம்..!! தாலூகா அலுவலகத்தை நகரின் மையபகுதியில் அமைக்க வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம !





கடையநல்லூரில் புதிதாக அமைய இருக்கும் நிரந்தர தாலூகா அலுவலக கட்டிடத்துக்கு பல ஊர் கிராம மக்கள் சிரம்மமின்றி வந்து செல்ல வசதியாக நகரின் மையப் பகுதியில் தாலுகா அலுவலக கட்டிடம் அமைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி புதியதாலுகா அலுவலகம் திறப்புவிழா நடைபெற்ற அன்றே மாவட்ட ஆட்சி தலைவரை நேரில் சந்தித்து தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் புதிய தாலுகா கட்டிட இடம் அமைவது குறித்து மனுகொடுத்தனர் அதன் பின்னர்( எஸ்டிபி) கட்சியினர் ஆர்ப்பாடம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர் கடந்த வாரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாடம் நடத்தினர் நேற்றைய தினம் அனைத்து கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இதற்கு திமுக நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார்


கடையநல்லூர் நகராட்சி தலைவி சைபுநிஸாசேகனா முன்னிலை வகித்தார்
ஆர்பாட்டதில் சேகனா
( திமுக)அப்துல் லத்தீப்(முஸ்லிம் லீக்)அய்யூப்கான்(சிபிஐ) கிருஷ்ணகுமார்(சிபிஎம்) அசன்இப்ராஹிம்(காங்கிரஸ்)மாரியப்பன்(பிஜேபி)சரவணன்(தேமுதிமுக)முருகன் (மதிமுக)ஆறுமுகச்சாமி (பாமக)முப்பிடாதி(வி.சிருத்தை)செய்யதுமசூது(மமக)மக்தும்(தமாக)பசும்பொன்(நாம்தமிழர்)ராசா(புதியதமிழகம்) மற்றும் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொன்டு அரசுக்கு எதிராக கோசமிட்டனர் இறுதியில் (சிபிஎம் )ராஜசேகர் நன்றி கூறினார்.

Thanks : Kurichi Sulaiman

No comments:

Post a Comment