Tuesday, March 11, 2014

இது துரோகமே....!!!!!

அன்பார்ந்த கடையநல்லூர்
தோழர்களே
இந்த பேஜ்ஜின் வழியாக கிடைத்த சொந்தங்களே...

நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஆசியக்கோப்பை அதிர்ப்தியை தந்தாலும் அது ஒரு சில தினங்களில் மனதில் இருந்து மறந்து போகக்கூடியவை!

ஆனால் இன்னுமொரு அதிர்ப்தியான விசயம் கால காலமாக நடைபெற்று கொண்டிருக்கும் விசயம் மிகவும் மன உளைச்சல் அடைய செய்யும் விசயம்.... நிரந்தரமாக மனதில் புண்ணாக தங்கிவிடும் விசயம்... இந்திய திருநாட்டில் இருந்து கொண்டே
பாகிஸ்தான் அணியை ஆதரிப்பதும்
பட்டாசு கொளுத்தி மகிழ்வதும்தான்!

இடையில் நீண்ட காலமாக பட்டாசு கொழுத்த வாய்ப்பு இந்திய அணி கொடுக்காததால் கொஞ்சம் மனம் நிம்மதியில் இருந்தது!

குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்தது போல் ஞாயிறு அன்று கிடைத்த
வாய்பில்
வகையற்ற சிலர்
வஞ்சகம் என்று தெரியாமலே...
வசைபாடினர்..!
பட்டாசு கொளுத்தி
பாராட்டி கொண்டிருந்தனர்!

யார் அந்த பாகிஸ்தானியர்???
நம் நாட்டிற்கும் அவங்களுக்கும் நட்பு சூழல் சுத்தமாக இல்லை...!! அப்படி இருக்கும் பொழுதில் இது தேவையா...!!

எண்ணிலடங்கா முறை
எண்ணற்ற வீரர்களை
எல்லையில்
முறைதவரி கொள்ளும்
முறையற்ற நாட்டு வீர்ர்களுக்கு
முறைசெய்கிறோமே!!!

இது...
இந்தியாவில்
இருந்துகொண்டு அதுவும்
பாதுகாப்பாக இருந்து கொண்டு
பாகிஸ்தானுக்கு
பாலாபிசேஷம் செய்கிற செயல்
எதற்கு ஒப்பு என்று
எல்லார்க்கும் தெரியும்!

தெரிந்தும் சில தோழர்கள் செய்கின்றனர்...!

இறப்புக்குபின் இந்த துரோகத்திற்கும் எல்லா மதங்களிலும் தண்டனை உண்டு!

நிறைய எழுதலாம்...!
நண்பர்களை நம்பி இத்துடன்
முடிக்கின்றேன்..

-சிட்லு ( for i love kadayanallur)