Saturday, May 10, 2014

குற்றாலம் .... முந்தியதோ சீசன் .. :)



கடந்த சில தினங்களாகவே நமதூரில் வெயில் இல்லாமல் சாரல் மழையும் சில தினங்கள் ஆலங்கட்டி மழை என சொல்லப்படும் ஐஸ் கட்டி மழையும் பெய்து நம்மை மகிழ்வித்தது ...







கடந்த வாரம் கடும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது அனால் இந்தவாரம் அதிகமாக தண்ணீருடன் குற்றாலம் மிக அழகாக குளிக்கும் விதத்தில் உள்ளது ... தற்போது சுற்றாலப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப் பட்டுள்ளனர் மேலும் சுற்றாலப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது ..





சீசன் முந்திவிட்டது என்று வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ...




குறிப்பு : அணைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது ...

2000த்தை தாண்டிய நமது ஐ லவ் கடையநல்லூர் - சிறப்பு பதிவு







~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஐ லவ் கடையநல்லூர்
முகநூல் பக்கம்
சிறப்பு பதிவு
2000 + likes

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நமது ஐ லவ் கடையநல்லூர் பக்கம் இன்றைக்கு 2000க்கும் அதிகமான அன்பர்களின் விருப்ப பக்கமாக மாறி உள்ளது!
இது கடந்து வந்த பாதை....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்னையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் எனக்கு போன வருடம்.. பேஸ்புக்கில் பல ஊர்களின் பக்கங்களை பார்க்கும் போது ஒரு ஏக்கம் இருந்தது..!
சில சுமாரான ஊர்களுக்கெல்லாம்,
சில சிறிய ஊர்களுக்கெல்லாம் பேஸ்புக் பக்கம் இருக்கையில் நமது ஊருக்கென்ன குறை?! நமது ஊரில் பசுமை இல்லையா..? நமது ஊரில் முன்னேற்றம் இல்லையா!? ஊரைசுற்றி பள்ளிவாசல்களும், கோவில்களுகளும், சர்ச்களும் இல்லையா... கொஞ்சம் தள்ளிப்போனால் கொஞ்சும் சாரல் தெரிக்கும் தென்காசி இல்லையா,?! பொதிகை மலை குற்றாலம் இல்லையா!
நாம் சென்னையில் இருந்தே நமது ஊரை நினைத்து இவ்ளோ ஏங்கும் பொழுது வெளி மாநிலம்.. வெளிநாடு என லட்ச எண்ணிக்கையில் நமது ஊரில் இருந்தும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்தும் சென்று நமது ஊரைப்பற்றி சிந்திப்பவர் இல்லையா!??
என்ற சிறிய எண்ணத்தின் பெரிய விளைவுதான் இந்த
ஐ லவ் கடையநல்லூர் பக்கமும்
அதன் அங்கமான நீங்களும்!!

ஆரம்பத்தில் விளையாட்டாக ஆரம்பித்த பக்கம் என்றாலும்... விளையாட்டு விருவிருப்பானது..
காரணம், கண்ணுக்கெட்டாத தொலைவில் இருக்கும் கடையநல்லூரான்களின் ஊக்குவிப்புதான்!
நன்றிகள்!

சிலர்,
இதுலாம் என்ன வேலை வேற வேலை இல்லையா என ஏளனம் கூட செய்தனர்..!

தாகம் உள்ளவனுக்குத்தான் தண்ணீரின்
அருமை தெரியும்-அது
அமுதெனவும் புரியும்!

அப்படி வெளிநாடுகளில் வேலைப்பார்ப்பவர்கள்
சிலர் சில வருடங்களாகவும்,
பலர் பல வருடங்களாகவும்
நம்மூரின் மேல் உள்ள தாகத்தில் உள்ளனர்! அவர்கள் தாங்கள் நடமாடிய தெரு, தன்னுடைய கோவில், பள்ளிவாசல், பயின்ற பள்ளி இப்படி பல பகுதிகளை காணும்பொழுது அவர்கள் அடையும் ஆனந்தத்தை வெளிநாடில் இருந்தவன் என்றமுறையில் நானறிவேன்!
(சென்னை என்றான், வெளிநாடு என்கிறான் என்று யோசிக்க வேண்டாம், நாங்கள் இருவர்)
அப்படி விரும்பும் மக்களின் ஆசை, மற்றும் ஆதரவுகளோடு வெற்றி நடை போட்டு 1000 லைக்குகளை கடந்து வந்தபின்பு
செய்திகள் பலவும் போடத் துவங்கினோம்!
இதில் வேடிக்கை என்னவென்றால்
ஒரு உண்மைச்செய்தி போட்டதால் காவல்நிலையம் சென்று கால் கடுக்க நின்று வந்த அனுபவமும் உண்டு!
ஆனால் அதன் பின் எங்கள் வேகம் கூடியதே தவிர குறையவில்லை!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடையநல்லூரில் உள்ள பல பெரியவர்கள் எங்கள் இன்பாக்ஸில் தொடர்புகொண்டு வெப்சைட் ஆரம்பிக்க சொல்கிறார்கள்!
வெளிநாட்டில் இருப்பவர்களும் இதே கோரிக்கையை வைக்கிறார்கள்.
<<<<<<<<->>>>>>>>>
ஆரம்பிப்பது பெரிதல்ல
அதை அட்டகாசமாக கொண்டு செல்லவும் வேண்டும்!!!
ஆதலால் பொறுமை காக்கிறோம்.
எங்கள் டீமில் பல நண்பர்கள் புகைப்படம் மற்றும் செய்திகளை அனுப்பி வருகின்றனர்!
அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குறிப்பிடும்படியாக..
திரு.ஏபிஎம் மாரியப்பன்
திரு.சரவணன் போலிஸ் ஸ்டேசன் தெரு
திரு.அருண்குமார் குமந்தபுரம்
இவர்கள் தொடர்ந்து பல புகைப்படங்களையும் செய்திகளையும் சமீபகாலமாக அனுப்பி வருகின்றனர்.
நன்றிகள் நண்பர்களே!
உங்கள உதவி
தொடரனும் தோழர்களே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நமது பக்கம் ஜாதி மதம் ஊர் வித்யாசம் இன்றி
நமது கடையநல்லூர்க்கே உள்ள பெருமையான வேற்றுமையில் ஒற்றுமை என்ற சிறப்பு அம்சத்துடன் செயல்பட்டு வருகிறது...
இதில் உள்ள
அத்துனை அன்புள்ளங்களுக்கும் நன்றி!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
•குறிப்பு•
உள்ளூரில் இருப்பவர்கள்
புகைப்படம் மற்றும் செய்திகளை தரவிரும்புகிறவர்கள், இன்பாக்ஸில் விருப்பம் தெரிவிக்கலாம்.
ஏனெனில் வெளிநாடுகளில் இருந்து பல தெருக்களுக்கான புகைப்படம், கந்தூரி விழா, கோவில் திருவிழா நிகழ்வுகளின் படம் மற்றும் செய்திகளை கேட்ட வண்ணம் உள்ளனர்.
இது எங்கள் வேண்டுகோள் மட்டுமே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இது தவிர
கதை
கட்டுரை
கவிதை
சொந்தமாக எழுதும் திறன் படைத்தவர்கள் தங்கள் திறமைகளை இங்கே வெளியிடலாம்
அவர்களின் பெயர் இட்டு அவர்கள் திறமைகள்
பதிவுசெய்யப்படும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி..நன்றி..நன்றி!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விமர்சனங்களை எதிர்நோக்கி
டீம்- ஐ லவ் கடையநல்லூர்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~