சாரல் விழா தொடக்க விழா குற்றாலம் கலைவாணர் அரங்கில் வைத்து, இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், விழாவை தொடங்கி வைக்கிறார். இரவு 10 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஜூலை 26:
குற்றாலம் எக்கோ பார்க்கில் தோட்டக்கலை கண்காட்சி நடைபெறுகிறது. மேலும், சுற்றுலா பயணிகளுக்கு நீச்சல் போட்டி நடத்தப்பட்டு, மாலையில் பரிசுகள் வழங்கப்படும்.
ஜூலை 27:
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாய்கள் கண்காட்சி
ஜூலை 28:
கொழு கொழு குழந்தைகள் போட்டி
ஜூலை 29:
பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச் சூழல் ஓவியப் போட்டி,
ஜூலை 30:
படகுப் போட்டி
ஜூலை 31:
ஆணழகன் போட்டி
ஆகஸ்ட் 1:
நிறைவு விழா நடைபெறுகிறது. இதில், தென்காசி எம்எல்ஏ சரத்குமார் தலைமையில், திரைப்பட நட்சத்திரங்களின் பல்சுவை கொண்டாட்ட நிகழ்ச்சி இடம்பெறுகிறது.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, மாலையில் கலைவாணர் அரங்கில் வைத்து பரிசுகள் வழங்கப்படும்.

No comments:
Post a Comment