Monday, August 11, 2014

தாலுகாவாக மாறியது நமது கடையநல்லூர் ..


முதல் அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–

அரசின் சட்ட திட்டங்களை நிறைவேற்றும் முக்கிய கருவியாகவும், மக்களை நாடிச் சென்று உதவிகள் புரியும் ஆபத்பாந்தவனாகவும், அரசாங்கத்தின் ஆணிவேராகவும், நிர்வாகத்தின் முதுகெலும்பாகவும், மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பதுமான வருவாய்த் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் முனைப்பான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

பொதுமக்களின் பயண நேரத்தைக் குறைக்கும் வகையிலும், காலதாமதமின்றி வருவாய்த் துறையின் சேவை மக்களை விரைந்து அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், புதிய கோட்டங்களை உருவாக்குதல், புதிய வட்டாட்சியர் அலுவலகங்களை உருவாக்குதல், ஒவ்வொரு கிராமத்திற்கும் தனியாக கிராம நிர்வாக அலுவலர்களை நியமித்தல் போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளை கடந்த மூன்று ஆண்டுகளாக எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, வருவாய்த்துறையின் சேவை மக்களுக்கு விரைந்து கிடைத்திடும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி, சங்கரன்கோயில், சிவகிரி மற்றும் செங்கோட்டை ஆகிய வட்டங்களைச் சீரமைத்து கடையநல்லூர் உள்பட 15 புதிய வருவாய் வட்டங்கள் நடப்பாண்டில் 45 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்துடன் தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் 254 வட்டங்களைச் சேர்த்து மொத்தம் 269 வட்டங்கள் செயல்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த அறிவிப்பின் மூலம், பொதுமக்களுக்கு, வருவாய்த் துறையினரின் சேவை விரைந்து கிடைக்கவும், வருவாய்த் துறையினர் தங்கள் சேவையை எளிதாகவும், விரைவாகவும், திறம்படவும் பொதுமக்களுக்கு ஆற்றவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


முதல்வர் அறிவிப்பை கீழ்காணும் லிங்க் இல் காணலாம் 

https://www.youtube.com/watch?v=kuL-WcxUuhQ