Saturday, June 21, 2014

சென்னையில் இருந்து குற்றால சீசனை அனுபவிக்க சிறப்பு சுற்றுலா:



சென்னையில் இருந்து குற்றால சீசனை அனுபவிக்க சிறப்பு சுற்றுலா: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு...

குளு குளு குற்றாலத்தை கண்டு களிக்கவும், அருவியில் குளித்து மகிழவும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னையில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமையிலிருந்து இரண்டு நாட்கள் குற்றாலத்திற்கு சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது.

இச்சுற்றுலா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 6.00 மணிக்கு மீண்டும் சென்னை வந்தடையும். இரண்டு நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சுற்றுலாவில் தென்காசியில் இரவு தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.


இச்சுற்றுலாவிற்கான கட்டணம் நபருக்கு ரூ.3,500/- (தனி நபருக்கு தனி அறை வசதியுடன்), இருவர் பகிர்ந்து கொள்ளும் அறை நபருக்கு ரூ.3,250/-, குழந்தைகளுக்கான கட்டணம் ரூ.3,000/- (4 வயது முதல் 10 வயது வரை).

இக்கட்டணம் சொகுசு பேருந்து வசதி, தங்கும் விடுதி, 6 வேளை சைவ உணவு, சுற்றுலா ஸ்தல நுழைவுக் கட்டணம் மற்றும் வழிகாட்டி கட்டணம் மேலும் ஞாயிற்றுக்கிழமை காலை குற்றால சுற்றுலா முடிந்தவுடன் சென்னை திரும்பும் வழியில் தென்காசி (விஸ்வநாதர் கோயில்), ஸ்ரீ வில்லிப்புத்தூர் (ஆண்டாள் கோயில்) மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களுக்கும் அழைத்துச் செல்லப்படும்.

மேலும் விவரங்களுக்கு ‘மேலாளர் (சுற்றுலா), தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், 2, வாலாஜா சாலை, சென்னை– 2’ என்ற முகவரியில் அல்லது 25384444, 25383333, 25389857 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளும்படி சுற்றுலாக் கழகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி: கடையநல்லூர் செய்திகள்

Friday, June 20, 2014

இலவச வேலை வாய்ப்பு முகாம் ..



இளைஞர்களுக்கான இலவச வேலைவாய்ப்பு முகாம் (தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு) தென்காசி ஐசிஐ மேல்நிலைப்பள்ளியில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 8 ஆம் வகுப்பு முதல் B.A. வரை படித்த, வேலைவாய்ப்பற்ற ஆண் பெண் இருபாலரும் இம்முகாமில் கலந்துகொள்ளலாம். ஆர்வமுள்ள இளைஞர்கள் கல்விச் சான்றிதழ், ரேஷன் கார்டு ஆகிய ஆவணங்களுடன் நேரில் வரவும்.

தொடர்புக்கு: 0462 2500302, 2500303

Thanks : I LOVE TENKASI / COURTALLAM

Thursday, June 19, 2014

குற்றாலம் - சில தகவல்கள்






நமது குற்றாலத்தில் சீசன் தொடங்கியாச்சு அதற்காக சில பயனுள்ள தகவல்கள் ...



குற்றாலம் !!

தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம்திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இடையேஅமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும்வருடத்திற்கு சில மாதங்கள் தான் குற்றால அருவிகளில் தண்ணீர் விழும். எனவே குற்றாலம் வர திட்டமிட்டுருந்தால் அருவிகளில் தண்ணீர் விழுகிறதா என்று தெரிந்தபின் வருவது சரியாக இருக்கும்.

ஜூன் முதல் செப்டம்பர் வரைதென் மேற்கு பருவமழையால் அருவிகளில் தண்ணீர், மிதமான வெப்பநிலைகுளிர் காற்று என குற்றாலம் அருவி களைகட்ட தொடங்கிவிடும்அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்குபருவமழையால் கடும் பனி மற்றும் சில நேரங்களில் கன மழை என சுற்றுசூழல் மாறிவிடும்அந்நேரம்  நீர்வீழ்ச்சியில் வெள்ளம் அதிகரிப்பதால்மக்கள் குளிக்க சில நேரங்களில் அனுமதிக்கபடுவதில்லை.

குற்றாலத்தில் உள்ள அருவிகள்

குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் உள்ளன.
  • பேரருவி ( MAIN FALLS ), இது 60 மீட்டர் உயரத்தில் இருந்து விழும்அருவி, இடையில் பொங்குமாகடலால் அழுத்தம் தடைப்பட்டு,மக்கள் குளிக்க பாதுகாப்பான வகையில் குறைந்த தாக்கத்தைதருகிறது.
  • சிற்றருவி ( CHITRARUVI ), இங்கு நீரின் அழுத்தம் குறைந்தே காணப்படும், இதன் வழியே தான் செண்பகாதேவி மற்றும்தேனருவிக்கு செல்ல முடியும்.
  • செண்பகாதேவி அருவி ( SHENBAGADEVI FALLS ) செண்பக மரங்கள்வழியாக பாய்கிறதுஅங்கு செண்பகாதேவி அம்மனுக்குஅர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் உள்ளது.
  • அங்கிருந்து 3 கீ.மீ தூரத்தில் தேனருவி ( THENARUVI ) உள்ளது. இரண்டு பெரிய கற்கள் இடையே 40 மீட்டர்  உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சி தொடங்குகிறது.
  • ஐந்தருவி ( AINTHARUVI ) இவ்வனைத்திலும் மாறுபட்டஅருவியாகும். இங்கு ஐந்து தனித் தனி அருவிகள் உள்ளன.
  • இந்த அருவிக்கு மேலே பழத்தோட்டம் அருவி ( PAZHATHOTTA ARUVI ), அல்லது விஐபி அருவி இருக்கிறது.
  • பழைய குற்றாலம் அருவி  ( PAZHAYA COURTALLA ARUVI ) இரண்டுபாறைகள் இடையே உள்ள பள்ளத்தாக்கில் இருந்து விழுகிறது.இடையில் இது மூடப்பட்டு பின் நீரின் போக்கை மாற்றிகுளிப்பதற்கு ஏதுவாக பாறைகள் செதுக்கபட்டபின் மீண்டும்திறக்கப்பட்டது.
  • புலி அருவி ( PUZHIARUVI ) செயற்கையாக உருவாக்கப்பட்டது.இவ்வருவியின் நீர் பாசனத்திற்காக திருப்பிவிடபடுகிறது
  • ஐந்து அருவி மேலே அரசு தோட்டக்கலை பூங்காவில் ஒரு சிறிய அருவி உள்ளதுஆனால் அது பொது வரம்புக்குள் இல்லை.


அருகில் பார்க்க வேண்டிய இடங்கள்

  • தெற்குமலை எஸ்டேட் - தேனருவியில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் இதை அடையலாம்.
  • ஐந்து அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவி அருகில் உள்ளபடகு சவாரி.
  • பேரருவி அருகில் உள்ள பாம்பு மற்றும் மீன் பண்ணை
  • சிறு குழந்தை பூங்காக்கள்.


குற்றாலத்தின் சிறப்புகள்

  • குற்றாலம் அருவிகள் சார்ந்த இடம் மட்டும் அல்லதெய்வீகமானஇடமும் கூடசிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்ரா சபை,இங்கு தான் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டஓவியங்கள் பல இங்கு உள்ளது.
  • தமிழ் கவிஞர் திருகூடராசப்ப கவிராயர் இதன் உச்சத்தை தனதுகுற்றால  குறவஞ்சியில் பாடியுள்ளர்.
  • மலையின் அடிவாரத்தில் உள்ள கோவில் இந்து சமய பாரம்பரியபடிசங்கு வடிவம் உள்ளது சிறப்பு.


குற்றாலம் அருகில் உள்ள சில கோவில்கள்

  • பேரருவியில் உள்ள திருகுற்றாலனாதர் கோவில்.சித்திரை மாதம்முழு நிலவின் போது பத்து நாள் சிறப்பு பிரார்த்தனை இங்குநடைபெறும்.
  • பண்பொழியில் உள்ள திருமலைக்கோவில் - குற்றாலத்திலிருந்து இருந்து 8 கிமீ.
  • இலஞ்சியில் உள்ள குமரன்கோவில்குற்றாலத்திலிருந்து 1 கிமீ.
  • தென்காசியில்  உள்ள காசிவிசுவநாதர்கோவில்,குற்றாலத்திலிருந்து இருந்து 6 கிமீ.
  • புளியரையில் உள்ள தக்ஷினாமூர்த்தி கோவில்,குற்றாலத்திலிருந்து இருந்து 12 கிமீ.
  • பாபநாசம் உலகாம்பிகை மற்றும் சிவன் கோவில்,குற்றாலத்திலிருந்து 35 கி.மீ.
  • ஆரியன்கா ஐயப்பன்கோவில்குற்றாலத்திலிருந்து 35 கிமீ.


அருகில் உள்ள மற்ற சுற்றுலாத்தளங்கள்

  • பாலருவி - கேரளாவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி.
  • பாபநாசத்தில் உள்ள பாபநாசம் ஆறுகுற்றாலத்திலிருந்து இருந்து35 கிமீ.
  • அகஸ்தியர் அருவி -  பாபநாசம் அருகே உள்ளது.
  • பாணத்தீர்த்தம் அருவி -  பாபநாசம் அருகே உள்ளது.
  • பாபநாசம் (லோயர்அணை -  பாபநாசம் அருகே உள்ளது.
  • பாபநாசம் (உயர்), காரையார்  அணை -  பாபநாசம் அருகே உள்ளது.
  • சேர்வலார் அணை -  பாபநாசம் அருகே உள்ளது.
  • மணிமுத்தாறு அணை -  பாபநாசம் அருகே உள்ளது.
  • களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் -  பாபநாசம் அருகேஉள்ளது.
  • மஞ்சோலை எஸ்டேட்மணிமுத்தாறு எஸ்டேட் & ஊத்து எஸ்டேட்பாபநாசம் அருகே உள்ளதுஇவ்வனைத்தும் 2300 முதல் 4200 அடிவரை அமைந்துள்ளன.


குற்றாலத்துக்கு வருவது எப்படி

சாலை  மூலமாக

சாலை வழியில் குற்றாலத்திலிருந்து பல்வேறு இடத்திற்கான தூரம்:
  • மதுரை: 160 கி.மீ.
  • திருநெல்வேலி: 59 கி.மீ
  • தென்காசி: 5 கி.மீ
  • செங்கோட்டை: 5 கி.மீ
  • மதுரை விமான நிலையத்தில் இருந்து: 160 கி.மீ
  • தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து: 120 கி.மீ
  • திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து: 190 கி.மீ

தென்காசி மற்றும் செங்கோட்டை இருந்து குற்றாலம், பஸ் போக்குவரத்துமூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளதுமதுரையில் இருந்து செங்கோட்டைவரும் பேருந்துகளாலும்திருநெல்வேலியில் இருந்து தென்காசி மற்றும்செங்கோட்டை வரும் பேருந்துகளாலும் குற்றாலத்தை அடையலாம்.மேலும் கேரளா மாநிலம் புனலூரில் இருந்து செங்கோட்டைதென்காசி,திருநெல்வேலி மற்றும் மதுரை செல்லும் பேருந்துகள் மூலவும்குற்றாலத்தை அடையலாம்.

தொடர் வண்டி மூலமாக

குற்றாலத்தில் தொடர் வண்டி நிலையம் இல்லைஆனால் செங்கோட்டைமற்றும் தென்காசி நிலையத்தில் இருந்து இருபது நிமிடங்களில்குற்றாலத்தை அடையலாம்இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் தொடர்வண்டிகள்.
  • பொதிகை எக்ஸ்பிரஸ்செங்கோட்டை - சென்னைசென்னை -செங்கோட்டை
  • பயணிகள் வண்டிசெங்கோட்டை - மதுரைமதுரை -செங்கோட்டை
  • பயணிகள் வண்டிசெங்கோட்டை - திருநெல்வேலிதிருநெல்வேலிசெங்கோட்டை

Thanks : har1sh.blogspot.com/