Wednesday, June 3, 2015

கடையநல்லூர் புதிய வட்டாச்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தருவது மற்றும் புதிய கட்டிட இடம் நகரின் மையப் பகுதியில் தேர்வு செய்ய கலெக்டரிடம் TNTJ மனு..


பெறுனர்:திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
திருநெல்வேலி.
பொருள்: கடையநல்லூர் புதிய வட்டாச்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தருவது மற்றும் புதிய கட்டிட இடம் தேர்வு சம்பந்தமாக.
ஐயா,
உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமதானமும் நிலவட்டுமாக.
கடையநல்லூர் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான தனி வட்டாச்சியர் அலுவலகம் இன்றுமுதல் செயல்படுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். இதற்கான உத்தரவு பிறப்பித்த தமிழக அரசுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
புதிதாக தொடங்க இருக்கும் தற்காலிக வட்டாச்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளான,
• பொது கழிப்பிட வசதி,
• அலுவலகம் முன்பு நிழல்கூரை அமைத்தல்,
• அனைத்து பேரூந்துகளும் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நின்று செல்வதற்கான ஏற்பாடுகள்,
• குடிநீர் வசதி
ஆகியவைகளை உடனடியாக நிறைவேற்றி தரும்படியும், புதிதாக அமையும் நிரந்தர வட்டாச்சியர் அலுவலக கட்டிடத்துக்கு பல ஊர் கிராம மக்கள் சிரம்மமின்றி வந்து செல்ல
• நகரின் மையப் பகுதியான போக்குவரத்துக்கு வசதியான ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள அரசு புறம்போக்கு இடத்திலோ,
• அட்டக்குளம் மேல் புறத்தில் உள்ள அரசு புறம்போக்கு குட்டை பால்ஊரணி மேல்பகுதிலோ,
இந்த அலுவலக கட்டிடம் கட்ட இந்த இரு இடங்களில் ஒன்றை தேர்வு செய்து,அரசுக்கு அனுப்புமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அப்போது நகர நிர்வாகிகள் அப்பாஸ், ஹாஜாமைதீ,ஹைதர்,பாதுஷா,அப்துல்லாஹ் ,ஜாஹீர் குறிச்சி சுலைமான் ஆகியோர் உடன் இருந்தனர்

Thanks : Sulaiman Sir

No comments:

Post a Comment