நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 37). விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டார்.
பின்னர் மாலையில் வீடு திரும்பிய போது, முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து கடையநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி வீட்டில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்நிலையில் விவசாயி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thanks ; Malai Malar
No comments:
Post a Comment