Saturday, August 1, 2015

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் கலாமுக்கு அஞ்சலி



ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு ஊர்வலம் நடைபெற்றது.

இந்திய மருத்துவக் கழகம் குற்றாலம் கிளை மற்றும் ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பில், அவருடைய உருவபடத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆய்க்குடி சிவன் கோயில் முன்பிருந்து தொடங்கிய மௌன அஞ்சலி ஊர்வலத்தில் அமர்சேவா சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், செயலர் சங்கர்ராமன், மருத்துவக் கழக கிளைத் தலைவர் முருகையா, மாணவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Thanks : Dinamani

No comments:

Post a Comment