Friday, August 7, 2015

கடையநல்லூர் உட்பட 12 வட்டங்களில் நாளை பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம்



திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களிலும் சனிக்கிழமை (ஆக.8) பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் ஒரு கிராமத்தில் 2ஆவது சனிக்கிழமையில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி இம்மாதம் 8ஆம் தேதி 12 வட்டங்களில் இம்முகாம்கள் நடைபெறவுள்ளன.

திருநெல்வேலி வட்டத்தில் கோடகநல்லூர் கிராமத்திலும், பாளையங்கோட்டை வட்டத்தில் கீழ நத்தம், சங்கரன்கோவில் வட்டத்தில் தன்னூத்து, தென்காசி வட்டத்தில் திப்பணம்பட்டி, செங்கோட்டை வட்டத்தில் தெற்குமேடு, சிவகிரி வட்டத்தில் இடையன்குளம் கிராமத்திலும் குறைதீர் முகாம் நடைபெறும்.

வீ.கே. புதூர் வட்டத்தில் ரதமுடையார் கிராமத்திலும், ஆலங்குளம் வட்டத்தில் கரும்பனூத்து, அம்பாசமுத்திரம் வட்டத்தில் கோபாலசமுத்திரம், நான்குனேரி வட்டத்தில் படலையார்குளம், ராதாபுரம் வட்டத்தில் கோவலன்குளம், கடையநல்லூர் வட்டத்தில் கடையாலுருட்டி கிராமத்தில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறும் என்றார் அவர்.

No comments:

Post a Comment