மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக யாகூப்மேமன் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து, கடையநல்லூரில் தடையை மீறி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் 72 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கட்சியின் மாவட்டத் தலைவர் திவான்ஓரி தலைமையில், அக் கட்சியினர் கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநில செயற்குழு உறுப்பினர் ஜாபர்அலிஉஸ்மானி, மாவட்ட துணைத் தலைவர் நயினாமுகமது, பொதுச் செயலர் யாசர்கான், மாவட்டச் செயலர் ஜிந்தா, பொருளாளர் அசன், நகரத் தலைவர் செய்யது, செயலர் அப்துல்லா, செய்தித் தொடர்பாளர் அபுலைஸ் உள்ளிட்ட 72 பேரை போலீஸார் கைது செய்தனர். இதையொட்டி புளியங்குடி டி.எஸ்.பி.வானுமாமலை, கடையநல்லூர் காவல் ஆய்வாளர் சாம்சன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
Thanks : Dinamani
No comments:
Post a Comment