இந்த கட்டுரை நமதூரை நாம் எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் ...
நம்ம என்னதான் வெளியூர்ல சொகுசா பங்களா ல இருந்தாலும் எவ்வளவு தான் பணம் சம்பாதிச்சாலும் கார் ல போனாலும் .. என்னதான் வித விதமா ... நம்ம சொந்த ஊர்ல ஒரு குடிசை வீட்லயோ ஓட்டு வீட்லயோ இருந்துக்கிட்டு.. பழைய சோறும் பச்சை மிளகாயும் வச்சு சாப்பிட்டு காலாற நடந்து மாப்ள எப்படி இருக்குற நு கேக்ரதுல இருக்குற சுகமே தனி.. அதான் ஒரு கவிஞன் சினிமா பாட்டுல "சொர்கமே என்றாலும் அது நம்மூரைப் போலவருமா" நு எழுதி இருப்பார் ... அது எவ்ளோ உண்மை னு நம்ம ஊரை விட்டு தள்ளி இருப்பவங்களுக்கு தெரியும் ..
எவ்ளோ பேர் நினைச்சு இருப்பீங்க...
ச்சே .. இங்க தர்ற சம்பளத்துல கால்வாசி சம்பளம் கடையநல்லூர் ல கொடுத்தாலும் போதும் அங்கேயே இருந்துருக்கலாம்...
ச்சே .. இதே மாதிரி நம்ம ஊர்ல காலேஜ் இருந்தா அங்கேயே படிச்சு இருக்கலாமே ..!!
ச்சே .. இதே மாதிரி நம்ம ஊர்ல நல்ல மாப்ள கிடைச்சு இருந்தா அங்கேயே கல்யாணம் பண்ணி செட்டில் ஆகி இருக்கலாமே ...
மேலே சொன்ன ,மாதிரி வெளி ஊர்ல வேலை பார்க்கிறவங்க.. படிக்கிறவங்க.. கல்யாணம் ஆகி போனவங்க இப்படி எல்லோருமே ஏதோ ஒரு காரணத்துக்காக கண்டிப்பா நம்ம கடையநல்லூர்-ஐ நினைச்சு பார்த்திருப்போம்.. பார்போம் ...
இந்த நினைவுகளை தான் இனி "நமது கடையநல்லூர் ... சில நினைவுகள்" என்ற தலைப்பில் தொடர்ந்து நமது பக்கத்தில் வெளியாகும் ... படித்து உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்... உங்களது அனுபவங்களையும் அனுப்புங்கள்.. இங்கே பகிர்ந்து கொள்ளலாம் ..
என்றென்றும் உதய்.ஜி

No comments:
Post a Comment