Tuesday, February 11, 2014

நமது கடையநல்லூர் ... சில நினைவுகள்... - 2


நினைவுகள் பகுதியில நம்ம இன்று நமதூரில் நம்மக்கு மிகவும் இணக்கமானதாக கருதப்படும் பெரியாற்றுப்படுகை , கருப்பாநதி அணை, மோட்டார் பாம்பு செட்டுகளைப் பற்றி நினைவு கொள்வோம் ..

என்னதான் நீங்க வெளியூர் ல அல்லது வெளிநாடுகள் ல எவ்ளோ தான் ஊர் சுத்தினாலும் நமதூருக்கு ஈடாகாது ... மிஞ்சி மிஞ்சி போனால் நீங்க பீச் பார்க் னு போவீங்க அத விட இங்க நம்ம ஊர்ல எவ்ளவோ இருக்கு ஏதாவது ஒரு விடுமுறை நாள் வந்தால் போதும் கூட்டம் கூட்டமா நம்ம எங்க போவோம் சொல்லுங்க பார்க்கலாம் ... கொஞ்சம் பெரிய ஆளுங்க உள்ள கூட்டம் கார் ஒ இல்ல பைக் ஒ எடுத்துக்கிட்டு கருப்பானதிக்கு போய்டுவாங்க அங்க போய் சமைச்சு சாப்டுட்டு வருவாங்க ..அப்புறம் இன்னொரு கூட்டம் சைக்கிள் எடுத்துக்கிட்டு அலி புரோட்டக் கடையில ரொட்டியோ இல்ல கிருஷ்ணா கேண்டீன் ல பூரி வடையோ ஏதோ அவங்களுக்கு பிடிச்ச மாதிரி வாங்கி கட்டிக்கிட்டு பெரியாத்து பக்கம் போகும்... இன்னும் இந்த சின்னஞ் சிறு பசங்க நம்ம KCC கிணத்துக்கு நீச்சல் படிக்கணு ஒரு குரூப் கிளம்பிடும்... இதுல கிடைக்கற சந்தோசம் நீங்க பீச் க்கு போறதுலையோ இல்ல எங்கயாவது பெரிய பெரிய காபி ஷாப் போய் நேரத்த செலவு பண்றது எதுலயுமே கிடைக்காது ... சில பேர் தினமும் காலைல மாவடிக்கால் தோப்பு , கிருஷ்ணபுரம் தோப்பு , பெரியாத்து வயல் போன்ற இடத்துல இருக்குற பாம்பு செட்டுல கூட குளிக்க போவாங்க ... இது எல்லாம் நம்ம கடையநல்லூர்-ஐ விட்டால் வேற எங்கயும் கிடைக்காது ... நம்ம அட்டைக்குளத்துல காத்து வாங்கிக்கிட்டே அங்க இருக்குற வண்டிக் கடையில மீன் , காளான் , பாணி பூரி வாங்கி சாபிடற சுகத்துக்கு எதுமே ஈடாகாது ...

உங்கள்ள எல்லோரும் நான் மேல சொன்ன ஏதோ ஒன்னு பண்ணி இருப்பீங்க .. நான் நம்ம ஊர்ல இப்டிலாம் எதுமே பண்ணினதில்ல னு சொல்றவங்க தாராளமா கமெண்ட் போடலாம் ...

நினைவுகள் தொடரும் ...

No comments:

Post a Comment