Wednesday, March 27, 2013

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்று வந்தவர் கைது கடையநல்லூர் போலீசார் நடவடிக்கை..





போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்று வந்தவரை கைது செய்து, கடையநல்லூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

பாஸ்போர்ட் புதுப்பித்தல்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அல் அமீன் தெருவைச் சேர்ந்தவர் புது மைதீன் என்பவருடைய மகன் அப்துல் ரசாக் (வயது 50). அவர் கடந்த 1993–ம் ஆண்டு முதல் வெளிநாடுகளுக்கு வேலை சென்று வந்தார்.0 வழக்கமாக ஒருவருடைய பாஸ்போர்ட் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். அப்துல் ரசாக் பாஸ்போர்டும் கடந்த 2003–ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது அவருடைய பாஸ்போர்ட் புதுப்பிக்கும் தேதி வந்தது.

அதன் அடிப்படையில் அப்துல் ரசாக் தன்னுடைய பாஸ்போர்டை புதுப்பிக்க விண்ணப்பித்து இருந்தார். புதுப்பித்தல் தொடர்பான விசாரணைக்கு, கடையநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அப்துல் ரசாக் விண்ணப்பம் வந்தது.

கைது
கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் விண்ணப்பத்தில் இருந்த முகவரிக்கு விசாரிக்க சென்றனர். அப்போது விண்ணப்பத்தில் இருந்த முகவரியும், போட்டோவும் வேறு வேறாக இருந்தது. இதைக்கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக மேலும் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதாவது அப்துல் ரசாக் தனது போட்டோவையும், மைத்துனர் முகமதுகான் முகவரியையும் இணைத்து பாஸ்போர்ட் எடுத்து இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, ஆள்மாறாட்டம் செய்து பாஸ்போர்ட் பெற்றதாக அப்துல் ரசாக்கை போலீசார் கைது செய்தனர்.

கடும் நடவடிக்கை

கடையநல்லூர் பகுதியில் இதுபோன்ற போலி பாஸ்போர்ட்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல்கள் வந்துள்ளன. அப்படி போலி பாஸ்போர்ட்கள் வைத்திருப்பவர்கள் விவரம் தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடையநல்லூர் போலீசார் தெரிவித்தனர்.


Thnx : Dailythanthi

No comments:

Post a Comment