Monday, March 25, 2013

கடையநல்லூரில் கணக்கு வழக்கில்லாத மின்வெட்டு - பொதுமக்கள் அதிர்ச்சி ...




கடையநல்லூரில் கடந்த இரண்டு மாதமாக மின்வெட்டு நேரம் குறைந்திருந்த நிலையில், மீண்டும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதால்,பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.தமிழகத்தில் சென்னை தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில் நாள்தோறும் 16 மணி நேரத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருந்தது. இதனால், தொழில்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக, நகர பகுதிகளில் 4 நேரம், கிராம பகுதிகளில் அதிகபட்சமாக ஐந்து மணி நேரம் என்ற அளவிலேயே மின்வெட்டு இருந்தது. அடிக்கடி மின்வெட்டு ஏற்படாமல், சீராக குறிப்பிட்ட நேரம் மட்டும் ஏற்பட்டதால், பொதுமக்களும், தொழில் துறையினரும் சற்று ஆறுதல் அடைந்தனர்.ஆனால், சில நாட்களாக மீண்டும் மின்வெட்டு நேரம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. திடீர், திடீரென மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இரண்டு நாட்களாக தினமும் சராசரியாக, பத்து மணி நேரம் வரை நகர பகுதிகளிலும், கிராம பகுதிகளில் 12 மணி நேரம் வரையிலும் மின் வெட்டு ஏற்பட்டது.இதனால், பொதுமக்களும், தொழில் துறையின ரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே, மின் வெட்டு நேரம் அதிகரித்துள்ளது; நீர் மின் உற்பத்தி குறைவு, மின் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால், மின்வெட்டு மேலும் நேரம் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.அடுத்த மாதம் பிளஸ்&2 பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், மாணவ, மாணவிகள் தீவிரமாக படித்து வருகின்றனர். இரவில் 7 முதல் 8 மணி வரையும் அதிகாலையில் 5 முதல் 6 மணி 
வரையும் மின்வெட்டு ஏற்படுவதால் மாணவர்கள் படிக்க முடிவதில்லை. ‘இந்த நேரத்தில்தான் மாணவர்கள் படிக்கின்றனர். எனவே அந்த நேரத்தில் மின் தடை செய்வதை தவிர்க்க வேண்டும்என பொதுமக்கள் கோருகின்றனர்.

No comments:

Post a Comment