Saturday, March 23, 2013

கடையநல்லூர் இலங்கை அகதிகள் முகாமில் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..



இலங்கையில் தனி ஈழம் அமைக்க வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடையநல்லூர் போகநல்லூரில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



முன்னதாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு முகாம் தலைவர் ரூபன் தலைமை தாங்கினார். முகாமை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 450-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்


No comments:

Post a Comment