Wednesday, March 20, 2013

தாமிரபரணியை இழக்கும் நெல்லை..!! ( ஒரு அதிர்ச்சி செய்தி )


செய்தி : தாமிரபரணியை திசைத் திருப்பி விட்டர்கள் 
எத்தனை நெல்லை மாவட்டக் காரர்களுக்கு இந்த செய்தி தெரியும்?


கூடங்குளம் அணு உலைக்காக தாமிரபரணி நெல்லைக்குள் வராமல்
கல்லிடைக் குறிச்சியில் மடை மாற்றம் செய்யப் பட்டுள்ளது

அம்பை செல்கிறவர்கள் கொஞ்சம் கண்களை திறந்து பாருங்கள்
கல்லிடைக் குறிச்சி ஊருக்கு கொஞ்சம் முன்னால்
பெரிய பாலம் கட்டி முடித்து விட்டார்கள் இன்னும் திறக்க வில்லை
அந்த இடத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்
உண்மை என்னவென்று புரியும்
மிஞ்சிப் போனால் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம்
தாமிரபரணியை தண்ணீரோடு நெல்லைக் காரர்கள் பார்க்கலாம்
அதற்குப் பின் வறண்ட தாமிரபரணியைப் பார்க்கப் போகிறோம்

கல்லிடைக்குறிச்சியில் திசைத் திருப்பப் படும் தாமிரபரணி
சேரன்மகாதேவி வழியாக செல்கிறது
சேரன்மகாதேவி அன்பர்கள் இதை கவனித்திருக்க கூடும்
சேரன்மகாதேவி வழியாக களக்காடு செலும் சாலையில்
ஸ்காட் கல்லூரிக்கு அடுத்து மிகப் பெரிய பாலம் கட்ட
அந்த சாலை தோண்டப் படுகிறது
அந்த இடத்தில் நின்றுப் பார்த்தாலே தெரியும்
தாமிரபரணி இனி நெல்லைக்கு போகாது என்று புரியும்
அவ்வளவு பெரிய அகலமான பாதளம் போன்ற தாமிரபரணி செல்லும்
புதிய ஆற்றின் வழிதடம் அமைக்கப் பட்டுள்ளது

அங்கு போக முடியாதவர்கள்
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும்
தேசிய நெடுஞ்சாலையில் சரியாக மூன்றடைப்பு தாண்டவும்
கண்களை திறந்து கிழக்கும் மேற்கும் பார்த்தீர்கள் என்றால்
மிகப் பெரிய புதிய ஆறு தோண்டப் பட்டுவிட்டது
இன்னும் நெடுஞ்சாலையைத் தான் தோண்ட வேண்டும்

இந்த இடங்களில் எல்லாம் ஒரு தகவல் பலகை வைத்திருக்கிறார்கள்
அதில் சாத்தான் குளம், திசையன் விளை சுற்றிலும்
வறட்சியான பகுதிகளுக்கு தாமிரபரணி ஆறு திருப்பி விடும்
மத்திய அரசின் நதி நீர் பங்கீடு திட்டம் என்று அழகாக எழுதி வைத்திருக்கிறார்கள்.

அதாவது இதனால் அறிவிக்கப் படுவது என்வென்றால்
நெல்லை வேளாண் பெரு மக்களின் வயற்றில் அடித்து
கூடங்குளம் அணு உலையை குளிர்விக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.


Thanks : www.ilovenellai.com

No comments:

Post a Comment