கடையநல்லூர் அருகே 1,322 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் செந்தூர் பாண்டியன் வழங்கினார்.
இலவச மிக்சி, கிரைண்டர்
கடையநல்லூர் அருகே உள்ள கிழங்காடு பஞ்சாயத்தில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு தென்காசி உதவி கலெக்டர் ராஜகிருபாகரன் தலைமை தாங்கி£ர். செங்கோட்டை யூனியன் தலைவர் முருகையா முன்னிலை வகித்தனார். சிறப்பு திட்ட துணை தாசில்தார் ரவி வரவேற்று பேசினார்.
மக்கள் நலனுக்காக...
விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் கலந்து கொண்டு 1,322 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கி பேசுகையில், தமிழகத்தில் ஜெயலலிதா 3–வது முறையாக முதல்– அமைச்சராக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். சுயநலம் இல்லாத முதல்வர். மாணவர்களின் நலனுக்காக கல்விதுறைக்கு மட்டும் ரூ.15 ஆயிரம் கோடி வழங்கி உள்ளார். தமிழ்நாடு மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருபவர், ஜெயலலிதா என்று பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமார் பாண்டியன், தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி, கடையநல்லூர் யூனியன் துணை தலைவர் பெரியதுரை, தாசில்தார் தேவபிரான், துணை தாசில்தார் ஆதிநாராயணன், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், பஞ்சாயத்து தலைவர் மூக்கையா, செல்லப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment