Thursday, May 23, 2013

கடையநல்லூர் முப்புடாதியம்மன் கோயில் தேரோட்டம்




கடையநல்லூர் முப்புடாதியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று (22.05.2013 ) கோலாகலமாக நடந்தது. கடையநல்லூர் மார்க்கெட் பகுதியில் பிரசித்தி பெற்று விளங்கும் முப்புடாதியம்மன் கோயில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 14ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி திருவீதியுலா நடந்தது. பிரமோற்சவ விழாவில் சிறப்பு பெற்ற தேரோட்டம் நேற்று நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினார். மாலை 3 மணிக்கு தேர்வடம் பிடித்து தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் "ஓம்சக்தி, பராசக்தி' கோஷம் முழங்கிட தேரை இழுத்தனர். நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகர வியாபாரிகள், வெள்ளாஞ்செட்டியார் சமுதாயம், விஸ்வபிரம்ம சமுதாயம், தேவர் சமுதாயம், வன்னியர் சமுதாயம், மஞ்சனைக் கோனார், சோழகர், உபாத்தியார்கள் சமுதாயம், வணிக வைசியர் சமுதாயம், யாதவர் சமுதாயத்தினர் மற்றும் கோயில் தக்கார் வெங்கடேஷ், செயல் அலுவலர் தர்மராஜ், கோயில் அலுவலக கணக்கர் கிருஷ்ணன் மற்றும் சமுதாய பெரியோர்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment