நமது கடையநல்லூர் பெயருக்கேற்றது போலவே நல்ல ஊரும்
கூட...!!!
"கடையநல்லூர்-
ஐ சுத்துன கழுதை
கூட
ஊரை விட்டு போகாது னு
சொல்வாங்க"
இப்ப நம்ம ஊரைப் சுற்றி
பார்போம்...
நமதூரின்
மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையும்
சுமார் 8 கிலோ மீட்டர்
தொலைவில் கருப்பாநதி அணையும் 3 கிலோ மீட்டர் தொலைவில்
பெரியார் ஆற்று படுகையும் உள்ளது.
இவ்வாற்றின் மூலம் தான் கடையநல்லூர்
முழுவதும் குடிநீர் சப்ளை செய்யப்படுகின்றது...
நமதூரைப்
பொறுத்தவரை மேற்கு பகுதியை "பேட்டை"
என்று அழைப்போம் இங்கு பெரும்பான்மை "முஸ்லீம்கள்"..
கிழக்கு
பகுதியை "மாவடிக்கால்" என்று அழைப்போம் இங்கு
பெரும்பான்மை இனத்தவர்கள் நாயக்கர்கள்.. தெற்கு பகுதியை "பஜார்"
என்றும் "தெரு" என்றும் அழைப்போம் இங்கும்
முஸ்லீம்கள் தான் அதிகம்..
மத்தியப்
பகுதியை "முத்துக்கிருஷ்ணாபுரம்" என்கிறோம் இங்கு "சேனைத்தலைவர்" சமுதாய மக்கள் தான்...
வடக்கு
பகுதி "கிருஷ்ணாபுரம்" இங்கு தேவர் இன
மக்களும் , தேவேந்திர குல மக்களும் அதிகம்...
அட்டக்குளத்திற்கு
மேற்கே அருந்ததியர் சமுதாயத்தினரும் கிறிஸ்தவ மக்களும் ஏராளம்..
மேலக் கடையநல்லூர்-
ஐ பொறுத்தவரை அனைத்து சமுதாய மக்களும்
சமபங்கு வகிக்கின்றனர். அக்ரஹாரம் , தேரடி வீதிக்கு புகழ் பெற்றதும் இதுதான்...
நமது நல்லூரில்
இல்லாத வசதிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நமதூர் அனைத்திலும் தன்னிறைவு பெற்றுள்ளது...
நமதூரின் சுவாரசியங்கள்
அடுத்த பதிவில்...
தொடர்புக்கு ourkadayanallur@gmail.com
-G.Udhay..



No comments:
Post a Comment